Friday, May 21, 2010

யோசிப்பவரா நீங்கள் ?

" எல்லோரும் ஒரே மாதிரி யோசிக்கிறார்கள் என்றால், அதில் சிலர் யோசிக்கவே இல்லை"  இப்படி சொல்லியிருக்கிறார் ஜெனரல் ஜார்ஜ் பட்டன்.

யதார்த்தமும் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் சிந்தனை என்பது வேறுபட்டால் தான் வேறு வேறு கருத்துக்கள் கிடைக்கும். அதிலிருந்து சிறந்த கருத்தைப் பெற முடியும். சிலர் தங்கள் கருத்து தான் சிறந்தது, வேறு கருத்துக்கள் கவைக்குதவாதவை என்று தீர்க்கமாகக் கருதுவார்கள்.

அதே நேரம் இன்னொரு கருத்தும் உண்டு. சிறந்தவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி தான் யோசிப்பார்கள் என்று. அந்தக் கருத்தை மனதில் வைத்துத் தானோ என்னவோ, சிலர் தாங்கள் நினைப்பது போல தான் எல்லோரும் நினைக்க வேண்டும் என்று ஒரு பாசிச மன நிலையுடன் இருப்பார்கள். தாங்கள் நினைப்பது சரியா தவறா என்பதைப் பற்றிக் கூட யோசிப்பதில்லை அவர்கள். இப்படியானவர்களை எங்கள் வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் காணக் கூடியதாய் இருக்கிறது. 

இந்த பாசிச சிந்தனை எங்கே தோன்றுகிறது என்று பார்த்தால், ஒரு மனிதனின் முதல் சமுதாயப் படியான குடும்பத்தில் துவங்குகிறது. ஒரு விடயத்தில் முடிவெடுப்பதற்கு தந்தையும் தாயும் ஆரோக்கியமான கருத்தாடல் செய்து சிறந்த முடிவை எடுக்கும் சந்தர்ப்பத்திற்கான நிகழ்தகவு எமது சமுதாயத்தில் எந்த அளவில் உள்ளது என்பது உங்களுக்கே தெரியும். அங்கே அந்தக் குடும்பத்தின் அடுத்த தலைமுறை கற்றுக்கொள்வது தமது பெற்றோர்களின் உதாரணத்தில் இருந்து தான். 


நாம் வேலைத்தளங்களில் எதிர்நோக்கும் பாசிசம் அடுத்த வகையினது. தொழில் நிறுவனங்கள் தமது உத்தியோகபூர்வ சட்டநகல் ஒன்றை வைத்திருப்பார்கள். அது எப்படி இருக்கும் என்றால், நீங்கள் என்ன தான் பிடுங்கினாலும், அந்த நிறுவனத்தை உங்களால் என்னவும் செய்ய முடியாது, நிறுவன உரிமையாளர்கள் சொன்னால் சொன்னது தான் என்ற மாதிரியும், தங்கள் விரும்பினால் உங்களுக்கு ஏதும் போட்டுத் தரலாம் என்ற மாதிரியும் ஒரு கோப்பை உருவாக்கி, சில சட்ட வல்லுனர்களை வைத்து விளங்க முடியாத வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து உருவாக்கி இருப்பார்கள். நீங்கள் அந்த சட்ட நகலைப் பற்றி கேள்வி கேட்க முடியாதபடி அந்தச் சட்டத்திலேயே சட்டம் இருக்கும்



Related Posts with Thumbnails