Friday, June 18, 2010

யாருக்கு சொர்க்கம்? ( 18 + )


சொர்க்கத்தில் சனத்தொகை கூடி இடப் பிரச்சினை ஆகி விட்டது. அதனால், ஒரு நாள் மட்டும் பரீட்சார்த்தமாக ஒரு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. யார் ரொம்ப கஷ்டப்பட்டு மண்டையைப் போடுகிறார்களோ அவர்களை மட்டும் உள்ளே அனுமதிப்பது என்று தலைமைப் பீடம் உத்தரவு போட்டது.

வாசலில் நேர்முகம் ஆரம்பமானது. முதலில் வந்தவரிடம் கேட்கப்பட்டது, 'நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய் ?'
முதலாமவன் சொன்னான் 'அது ரொம்ப மோசமான நாள். என் மனைவியுடன் இன்னொருவனுக்கு தொடர்பு இருக்கு என்று எனக்குத் தெரியும், அன்று அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடிக்க சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்டேன். வீடு முழுவதும் தேடியும் அவனைக் காணவில்லை, எங்கள் வீடு 25 ஆம் மாடியில் இருக்கு, வெளியில் வந்து பால்கனியில் எட்டிப் பார்த்தேன், வெளியில் பால்கனி விளிம்பில் பிடித்து அவன் தொங்கிக்கொண்டு இருந்தான். உடனே வீட்டுக்குள்ளே போய் சுத்தியல் எடுத்து வந்து அவன் கைகளில் போட்டேன் ஒரு போடு, கைகளை விட்டு கீழே விழுந்தான், ஆனால் அவன் பற்றைகளில் போய் விழுந்த படியால், தப்பி விட்டான், எனக்கு பொறுக்க முடியவில்லை, உள்ளே இருந்த ப்ரிட்ஜை தள்ளிக்கொண்டு பால்கனிக்கு வெளியே தள்ளி அவனுக்கு மேல் போட்டு விட்டேன். அதோடு அவனும் மண்டையை போட்டு விட்டான், இந்தத் தள்ளு முள்ளில் நானும் ஹார்ட் அட்டாக்கில் செத்து போய் விட்டேன்'
'ம்ம் இது ஒரு மோசமான சாவு தான், நீ சொர்க்கத்துக்கு போகலாம்'.
அடுத்தவனிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது.
இரண்டாமவன் சொன்னான் 'ச்சே, எவ்வளவு மோசமான நாள் அது. நான் 26 ஆவது மாடியிலுள்ள என் வீட்டின் பால்கனியில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தேன், திடீரென்று என் கால் சறுக்கி பால்கனிக்கு வெளியே விழுந்து விட்டேன், அதிர்ஷ்டவசமாக கீழே அடுத்த மாடி பால்கனியைப் பிடித்து விட்டேன், ஆனால் திடீர் என்று ஒரு மனிதன் ஓடி வந்து சுத்தியலால் என் கையில் அடித்து கீழே தள்ளி விட்டான். அப்படி விழுந்தும், நான் பற்றைகளில் விழுந்த படியால் அடி படாமல் தப்பினேன், ஆனால் அந்த மனிதன் விடவில்லை, மேலிருந்து ப்ரிட்ஜை என்மேல் போட்டு என்னை இங்கே அனுப்பி விட்டான்'
'உன் சாவு ரொம்ப மோசமாக இருக்கு, அதனால் உனக்குச் சொர்க்கம்'
மூன்றாவது ஆள் வந்தான், 'சரி நீ சொல்லு, நீ இறந்த நாள் எப்பிடி இருந்தது?'
'நான் உடைகள் இல்லாமல் ஒரு ப்ரிட்ஜுக்குள் ஒளிந்து இருந்தேன் ....'

'அடப் பாவி, அவனா நீ?.. '

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்களைப் பகிர்க நண்பர்களே

Related Posts with Thumbnails